Monday, August 30, 2010

நறுக்குன்னு ஒரு கேள்வி?!!!

அவள்:அந்த ஆள...என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்?பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமா?அவன்தான் டைவார்ஸ் கொடுப்பானா?நானும் கையெழுத்து போடுறேன்.
அவள் அம்மா:எத செஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு செய்மா.
அவள்:ஏம்மா! அவனுக்கு அவ்ளோ கொழுப்பு இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்?
நானும் மாசம் 30000 ரூபாய் சம்பாதிக்கிறேன்மா.நான் ஏன் அடங்கிபோகணும்?எனக்கென்ன தலை எழுத்தா?என்ன வேலைக்காரிமாதிரி நடத்துனா...அதன் கோச்சுகிட்டு வந்துட்டேன்.இப்போ வக்கீல் நோடீஸ் அனுப்பிசிருக்கான்.
அவள் அம்மா:இல்லம்மா இதெல்லாம் பேச நல்ல இருக்கும்.வாழ்க்கைக்கு ஒத்துவருமா?
அவள்:நீ சும்மா இரும்மா எனக்கு தெரியும்.நான் பாத்துகறேன் அந்தாள கோர்ட்ல..



அவன்
:டேய், அவளுக்கு திமிர பாத்தியாடா?எல்லாம் சம்பாதிக்குற திமிரு.நாந்தான் கோவத்துல டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிச்சுட்டேன்.அவளாவது மன்னிச்சுடுங்க நாம சேர்ந்து வாழலாம்னு சொல்றாளா பாரு!
அவன் friend:நீதான் விட்டுகொடுத்துபோயேன்.
அவன்:விட்ரா.நிலைமை தலைக்கு மேல போய்டுச்சு.இனிமே கோர்ட்தான் பதில் சொல்லணும்.



கோர்ட்ல அவங்களுக்கு அன்னிக்கு trial.
பலவிதமான வாதங்கள்.ரெண்டு பெரும் சளைக்காம ஒருத்தரபத்தி ஒருத்தர் குறை சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
இவங்கள செர்த்துவைக்கவே முடியாதுன்னு முடிவு பண்ண ஜட்ஜ் இவங்க ரெண்டுபேரையும் பார்த்து கேட்டார்.
"உங்களுக்குள் மனவேற்றுமை அதிகமா இருக்கு.நாங்க என்ன சொன்னாலும் கேட்குற நிலமையில நீங்க இல்ல.உங்களுக்கு இந்த கோர்ட் விவாகத்தில் இருந்து விடுதலை கொடுத்திரும் ஆனா எந்த கோர்ட்ல போய் உங்க 5 வயசு குழந்தைக்கு எந்த கோர்டுக்கு போய் விடுதலை வாங்கி கொடுப்பீங்க?????"
ரெண்டு பெரும் ஒருத்தருக்கொருத்தர் சலனமே இல்லாமல் பாத்துகிட்டாங்க!!

இந்த நிலைமை எந்த குழந்தைக்கும் வரக்கூடாது.கமல் படத்துல சொல்வாரு.
"husband அண்ட் wife பிரியலாம் ஆனா அம்மா அப்பா பிரியக்கூடாது!!"யோசிங்க மக்களே!!!
டிஸ்கி:இது 100% புனைவு (கற்பனைங்க) அதனாலே இப்படி எல்லாம் மரியாதை இல்லாம husbandஅ பேசுவாங்களான்னு கேட்டு தயவு செஞ்சு பின்னூட்டம் வேண்டாம்.கருத்த மட்டும் எடுத்துகோங்க ple.....ase.

2 comments:

ப.கந்தசாமி said...

Good.

Thenral said...

Thanks!Ithapathi nijamave sindhichaanganna nalla irukkum.

Post a Comment

Related Posts with Thumbnails