விஜய் டீ.வி யின் 'ஆபீஸ்' தொடரின் கணக்கற்ற ரசிகர்களில் நானும் ஒரு அங்கம். இன்றைய எபிசோட் என்னை மிகவும் பாதித்தது.
'விஷ்ணு' கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டெனில் அது அவரது வெகுளித்தனத்திற்காக மட்டுமே.அந்த projector திருட்டில் விஷ்ணுவை திருடனாய் காட்டியிருப்பது வருந்தத்தக்கது. நண்பனுக்கு அத்தனை அவமானம் நேரும்போதும் மௌனம் சாதிப்பதாய் காண்பித்திருப்பது சுயநலத்தின் உச்சம்.
தனக்கென்ன துன்பம் வரினும் நண்பனின் மானம் காப்பவனே சிறந்த தோழன் ஆவான்.நட்பின் கௌரவத்தையே குடை சாய்ப்பதாய் இருந்தது அந்த சம்பவம்.அதை(projector) எடுக்க என்ன நியாயம் கூறினாலும் நட்புக்கு செய்யும் துரோகம் என்பதை மறுக்கமுடியாது. கத்தியால் குத்துப்பட்டாலும் வலி காயம் குணமாகும்வரை மட்டுமே. ஆனால் நம்பிக்கை துரோகம் வாழ்நாள் முழுதும் காயப்படுத்தும்.
இத்தனையும் நடந்தும் ஏதுமறியாதவன்போல சாதாரணமாய் வலம் வரும் விஷ்ணு கதாப்பாத்திரம் வில்லனை விட ஒரு படி கீழிறங்கியது.
கார்த்திக் மன்னித்தாலும் இச்செயலை என்போன்ற ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.
No comments:
Post a Comment