tag:blogger.com,1999:blog-10012412694191013042024-03-14T00:04:38.096+05:30Tamizh thenralTamizh Thenral!Be coo...oool!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-38200290394791390662014-08-15T08:41:00.001+05:302014-10-15T15:41:01.383+05:30விந்தை<p dir="ltr"><br>
வெள்ளையனை<br>
வெளியேற்றிய திருநாளுக்கு வாழ்த்து கூற<br>
நாம் உபயோகிப்பது <br>
ஆங்கில மொழி <br>
'Happy independence day'!<br>
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!</p>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-33418483008544262462014-07-30T22:59:00.001+05:302014-07-30T23:03:39.137+05:30ரசிகனின் பார்வையில்<p dir="ltr">விஜய் டீ.வி யின் 'ஆபீஸ்' தொடரின் கணக்கற்ற ரசிகர்களில் நானும் ஒரு அங்கம். இன்றைய எபிசோட் என்னை மிகவும் பாதித்தது.</p>
<p dir="ltr">'விஷ்ணு' கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டெனில் அது அவரது வெகுளித்தனத்திற்காக மட்டுமே.அந்த projector திருட்டில் விஷ்ணுவை திருடனாய் காட்டியிருப்பது வருந்தத்தக்கது. நண்பனுக்கு அத்தனை அவமானம் நேரும்போதும் மௌனம் சாதிப்பதாய் காண்பித்திருப்பது சுயநலத்தின் உச்சம்.</p>
<p dir="ltr">தனக்கென்ன துன்பம் வரினும் நண்பனின் மானம் காப்பவனே சிறந்த தோழன் ஆவான்.நட்பின் கௌரவத்தையே குடை சாய்ப்பதாய் இருந்தது அந்த சம்பவம்.அதை(projector) எடுக்க என்ன நியாயம் கூறினாலும் நட்புக்கு செய்யும் துரோகம் என்பதை மறுக்கமுடியாது. கத்தியால் குத்துப்பட்டாலும் வலி காயம் குணமாகும்வரை மட்டுமே. ஆனால் நம்பிக்கை துரோகம் வாழ்நாள் முழுதும் காயப்படுத்தும்.</p>
<p dir="ltr">இத்தனையும் நடந்தும் ஏதுமறியாதவன்போல சாதாரணமாய் வலம் வரும் விஷ்ணு கதாப்பாத்திரம் வில்லனை விட ஒரு படி கீழிறங்கியது.</p>
<p dir="ltr">கார்த்திக் மன்னித்தாலும் இச்செயலை என்போன்ற ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது.</p>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-65058563866300318662014-07-29T15:07:00.001+05:302014-07-29T15:07:40.299+05:30சைவம் என் பார்வையில்<p dir="ltr">சைவம்-இந்நேரம் நிறைய பேர் பார்த்து ரசிச்சிருப்பீங்க.நமது ரசனையை நம்பி எடுக்கப்படுகிற இந்தமாதிரி படங்கள் ஓடினால் நாம் ரசிக்க இன்னமும் நல்ல படங்கள் வரிசைக்கட்டி நிற்கும்.</p>
<p dir="ltr">கதை பெரிசா ஒண்ணுமில்லை. ஒரு கிராமம் அதுல ஒரு குடும்பம்.குடும்ப தலைவர் நாசர்.கோவில் திருவிழாவிற்கு அவரது மகன்கள், மகள், பேரப்பிள்ளைகள் வருகின்றனர். அப்போ நடக்கிற சில கெட்ட நிகழ்வுகளால பூசாரி ஏதாவது வேண்டுதல் நிறைவேற்றாம விட்ருப்பீங்கனு ஞாபகப்படுத்தறாரு.அந்த வீட்டு செல்லப்பேத்தி ஆசையா வளக்கிற சேவல் (பாப்பா) 3 வருஷத்துக்கு முன்னாடி சாமிக்கு நேந்துவிட்டது எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருது.<br>
நாசர் அத பலி கொடுக்கலாம்னு முடிவு பண்றப்போ சேவல் காணும்.<br>
அந்த சேவல குடும்பமே தேடுது. யார் ஏன் ஒளிச்சு வைச்சாங்க, சேவல கண்டுப்பிடிச்சாங்களா, அந்த சேவலோட நிலை என்னங்கறது மீதி கதை.</p>
<p dir="ltr">திரைக்கதை நன்று. எல்லா கதாபாத்திரங்களும் அளவோட நடிச்சு அவங்கவங்க பாத்திரத்துக்கு வலு சேர்த்திருக்காங்க.<br>
சாரா அழகுப்பதுமை.நாம செய்ற தப்புக்கு யார பலிக்கடா ஆக்கலாம்னு யோசிக்கிற இந்த காலத்துல யாரோ செய்ற தப்புக்கெல்லாம் சாராவே முன்வந்து தோப்புக்கரணம் போடும் பண்பு வியக்கத்தக்கது.</p>
<p dir="ltr">சரவணன் என்கிற ஷ்ரவன் கதாபாத்திரம் அருமை.பட்டணத்தில் வளர்ந்த சிறுவனின் மனநிலை நன்றாக பிரதிபலிக்கிறது.கண்மாய்ல துணி துவைக்கிறதையும் எருமை குளிப்பாட்டுறதையும் பார்த்து இதுதான் உங்க ஊரு beachஆனு கேட்டு கடுப்பாகும்போதும் சரி, பாண்டி விளையாடத்தெரியாமல் கீழே விழும்போதும் சரி, எல்லோருக்கும் சாரா சேவலை மறைக்கும் விஷயம் தெரியும் எனத்தெரியாமல் அனைவரிடமும் அடி வாங்கும்போதும் சரி,  கிளைமாக்சில் சாராவிடம் மன்னிப்பு கேட்கும்போதும் சரி அவனது நடிப்பு அட்டகாசம்.</p>
<p dir="ltr">நாசர் தேர்ந்த நடிகர்.அவரது பங்கை சரிவர செய்திருக்கிறார்.சேவலை தேட நடக்கும் கலாட்டாக்கள் அனைத்தும் ரகளை. அதிலும் உரித்த கோழியை காண்பித்து இதுதான் உன் கோழி என திருடன் சொல்வதும் எப்படி நம்புவது என்றதும் 'உங்க கோழிக்கு மச்சமில்லையா?' எனக்கேட்பது கலகலப்பின் உச்சம்.</p>
<p dir="ltr">அந்த வெற்றிலை ஜோசிய சீனும் கலகலப்பின் உச்சம். வெற்றிலையில் மைபோட்டுப்பார்த்து 'வீடு தெரியுது முற்றம் தெரியுது அதுக்குமேல இருட்டா தெரியுதே' என்றதும் அந்த வீட்டில் வேலைபார்க்கும் பெண் 'மைப்போட்டா இருட்டாதான் தெரியும் இந்தாங்க சுண்ணாம்பு போட்டு பாருங்க' என்று மை வைத்த வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது ரகளை.</p>
<p dir="ltr">அந்த வேலைக்காரர் மற்றும் அவரது மனைவி கதாப்பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கது.</p>
<p dir="ltr">கிராமத்து கதை எனில் உறவுகளின் உன்னதம், ஊர் பகை, விவசாயத்தின் பெருமை எனப்பார்த்து பழகிய நமக்கு ஐந்தறிவு ஜீவன்களிடம் காட்டும் பரிவு எந்தளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கிறது.</p>
<p dir="ltr">இப்படி நிறைகள் இருந்தாலும் சில இடங்களில் படத்தில் சிறு தொய்வை உணரமுடிகிறது. சேவல் தேடும் சீன் மிகவும் நீளமென்றே தோன்றுகிறது.பல காட்சிகளில் 'வருஷம் 16' திரைப்படத்தின் சாயலை உணரமுடிகிறது.</p>
<p dir="ltr">எனினும் ஒரு புதிய களத்தை எடுத்துக்கொண்டு அதை ரசிக்கும்படி கொடுத்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்!ஒருமுறை பார்க்கலாம்.</p>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-74283788660262319202014-07-26T20:07:00.001+05:302014-07-26T21:29:32.254+05:30வேலை இல்லாப்பட்டதாரி என் பார்வையில்<p dir="ltr">தனுஷ் 25வது படம்.பட்டய கிளப்பியிருக்கார் மனுஷன்.படம் பேருக்கேத்தமாதிரி வேலையில்லா பட்டதாரியா எல்லாரோட ஏளன பார்வையாலயும் மனசுக்குள்ள காயப்பட்டாலும் வெளியில கெத்து காமிக்கிற கதாபாத்திரம். முதல் பாதி நகைச்சுவை, இடைவேளையில  sentiment, அப்புறம் செம்ம மாஸா இருக்கு படம்.</p>
<p dir="ltr">சரண்யா பத்தி சொல்லலன்னா படத்த நான் முழுமையா விமர்சிக்கலன்னு அர்த்தம். அவங்களுக்கு இந்த கதாபாத்திரம் அல்வா மாதிரி. பின்னிட்டாங்க.ஆனா அவங்க இறந்து போற sceneல கண்கலங்க வைச்சுட்றாங்க.</p>
<p dir="ltr">சமுத்திரக்கனி ஒரு தேர்ந்த இயக்குனர் மட்டுமில்ல நல்ல நடிகர்னும் காமிச்சிருக்கார்.</p>
<p dir="ltr">நகைச்சுவை திணிக்கப்படாம படத்தோட கலந்திருப்பது ரசிக்கும்படியா இருக்கு.விவேக் welcome back.</p>
<p dir="ltr">Second halfல students கூட்டம் கூட்டமா வந்து உதவி பண்றப்போ நண்பேண்டானு சொல்லி கைத்தட்டணும்போல இருக்கு.சின்ன சின்ன வசனங்களும் ரொம்ப சிரத்தையா கையாண்ட பாங்கு நிச்சயம் பாராட்டுக்குரியது.அமுல்பேபி வில்லன கடைசியில surrender ஆகவைச்சு வில்லனையே சிரிப்பு போலீஸ் ஆக்கிட்டாங்க.</p>
<p dir="ltr">தனுஷோட வண்டி class விவேக் அதுல ஏறி எங்க சார் walking கூட்டிட்டு போறீங்கன்னு கேட்குறப்போ theatreஏ சிரிப்பலைல குலுங்குது.</p>
<p dir="ltr">அமலாபால் அழகு. சுரபி நல்ல நடிகை இவ்ளோ சின்ன கதாபாத்திரத்துக்கு தேவையில்லனு தோணிச்சு.</p>
<p dir="ltr">இசை as usual. நல்லாயிருந்தது.<br>
மொத்தத்துல மிஸ் பண்ணாம பார்க்க கூடிய படம்!</p>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-27674363496728991382014-06-06T21:31:00.001+05:302014-06-06T21:32:45.211+05:30அன்னைக்கோர் கடிதம்!<p dir="ltr">எனது லட்சியங்களின் உச்சம் உனது சந்தோஷம்<br>
எனது வெற்றிகளின் உச்சம் உனது புன்சிரிப்பு<br>
எனது வேட்கைகளின் உச்சம் உனது மனத்திருப்தி<br>
எனது நிம்மதியின் உச்சம் உனது அருகாமை<br>
எனது பிரார்த்தனைகளின் உச்சம் உனது நல்வாழ்வு<br>
எனது பெருமைகளின் உச்சம் உனது மகளாக பிறப்பெடுத்தது!</p>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-25961424994758481962014-06-05T12:52:00.001+05:302014-06-06T21:31:14.811+05:30அன்னை!<p dir="ltr">உருவ வழிபாட்டில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை;<br>
உனதுருவில் இறைவனை காணும்வரை!</p>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-81088225841250087262013-08-20T19:33:00.001+05:302013-08-20T19:33:18.543+05:30விட்டில் இதயம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
விளக்கினை நாடும் விட்டில் பூச்சியாய்<br />
உனது விழிகளின் ஒளியினை நாடும் <br />
எனது இதயம்!<br />
<br /></div>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-4894536305052595322013-07-18T18:07:00.001+05:302013-07-18T18:07:06.171+05:30டெல்லி பயங்கரம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காதலித்துவிடுவோமோ என்றெண்ணி <br />
அழகாய் இருகிறாய் பயமாய் இருக்கிறது என்கிறாய் நீ <br />
அனால் எனக்கோ அழகாய் இருப்பதே பயமாயிருக்கிறது!</div>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-32882836219196270982013-07-18T18:04:00.001+05:302013-07-18T18:04:15.984+05:30விட்டில் இதயம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h5 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
விளக்கினை நாடும் விட்டில்பூச்சியாய் </h5>
<h5 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
உனது விழிகளின் ஒளியை நாடும் </h5>
<h5 class="uiStreamMessage" data-ft="{"type":1,"tn":"K"}">
எனது இதயம்! </h5>
</div>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-86267958940819731982013-07-18T18:02:00.000+05:302013-07-18T18:02:25.914+05:30கவிதை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எண்ணம் எனும் தூரிகைகொண்டு <br />
வார்த்தைகள் எனும் வர்ணம் தீட்டி<br />
இதயம் வரைந்த ஓவியம்!<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /><br />
<br />
<br />
<br />
<br /><br />
<br />
<br />
<br />
</div>
Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-22247687623251816722011-01-19T18:56:00.002+05:302011-01-19T18:59:13.849+05:30எப்படி இருக்கீங்கோ!!!வணக்கம்!என்னை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.ஹ்ம்ம்...வேலை ஜாஸ்தியா போச்சு இந்த பக்கமே வரதில்லை.<br />எனக்கு புடிச்ச பதிவர்களோட பதிவுகளையும் பாக்க முடியறதில்லை.எப்போ ப்ரீ ஆறேனோ அப்போ தொடருகிறேன்.அதுவரை தடங்கலுக்கு வருந்துகிறேன்.Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-83141957358749619912010-09-29T11:29:00.004+05:302010-09-29T11:47:58.840+05:30ஓ....மனமே!!!ஓ...மனமே!!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXX0icG6o06dOLO_EE5ve-zPn6ZzNzh_9No95pM_GTq0eZ6ozyISLglVJoRRo6zaPN9pnky6V2OlYnWCjyG1iJppEuE1G-Ann68QlgJykcTfVnJrUR_Zso5NDK8fob5nfgvk0pfmc-dLEC/s1600/images.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 178px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXX0icG6o06dOLO_EE5ve-zPn6ZzNzh_9No95pM_GTq0eZ6ozyISLglVJoRRo6zaPN9pnky6V2OlYnWCjyG1iJppEuE1G-Ann68QlgJykcTfVnJrUR_Zso5NDK8fob5nfgvk0pfmc-dLEC/s200/images.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5522215606091203186" border="0" /></a><br />ஒரு விஷயம் நம்ம ஆசைப்பட்டு கிடைக்கலன்னா அவ்ளோ வலிக்கும்.அது இயற்கை.நான் என்ன ஒரு optimistனு சொல்லிப்பேன்.எதுவந்தாலும் அதை சமாளிக்கனும்ன்னு சொல்வேன்.எனக்கு கொஞ்ச நாளா நெகடிவ் thoughts ஜாஸ்தியாயிடிச்சு.ஆனா அது என் சொந்த ஊருக்கு போறேன்னதும் பாஸிடிவ் எனெர்ஜியா மாறிடுச்சு.<br /><br />இந்த சமயத்துல என் மனசுல தோணினதை எல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னுதான் இந்த பதிவு. (யப்பா....இன்னும் முன்னுரையே முடியலையா????)<br /><br />நாம கேட்காமையே நமக்கு ஒரு நல்ல அம்மா,அப்பா,குடும்பம்,நண்பர்கள்னு எல்லாரையும் பாத்து பாத்து நமக்கு கொடுத்த கடவுளுக்கு நமக்கு ஒரு அமைதியான வாழ்க்கைய அமைச்சுத்தர தெரியாதா என்ன?அதுக்கு நாம முழுசா நம்பனும்.நம் வாழ்கை நல்லா இருக்கும்னு.ஒரு விஷயம் நமக்கு கிடைக்கலைன்னா அது நமக்கு தகுதியானது இல்லை,அதனால நமக்கு நாம எதிர்பார்த்த சந்தோசம் கிடைக்காதுன்னும் எடுத்துக்கலாம் (சீ சீ இந்த பழம் புளிக்கும்....).அது எதாவது பொருளோ,பணமோ,மனிதர்களோ எதற்கும் பொருத்தி பாக்கலாம்.<br /><br />ஒரு வேலை நமக்கு கிடைக்கலன்னா இதைவிட பெரிய வாய்ப்பு நமக்காக waitingல இருக்குன்னு அர்த்தம்.இதே தான் மத்த விசயங்களுக்கும்.அதனால மனசு துவள கூடாது.சிலபேர் பணம் இருந்தா வாழ்கை சந்தோஷமா இருக்கும்னு நினைக்கலாம்.ஆனா பணம் அவங்களுக்கு நிம்மதியை கொடுக்குதா??????நிச்சயம் கிடையாது.அப்படி கிடைச்சா அவங்க ஏன் நிம்மதிக்காக சாமியார்களை(உண்மையான) தேடி போகணும்?<br />அதனால மனுஷனோட நிம்மதி எதுலயும் இல்ல.அவனுக்குள்ளேதான் இருக்கு.ஒரு விஷயத்துக்கு வருத்தப்பட தேவையான எனெர்ஜிதான் சந்தோஷப்படவும் தேவைப்படுது.கவலைப்படரதால எதுவும் மாறாது.பின்னே ஏன் நம்ம நிம்மதியை நாமே குலைச்சுக்கணும்?இருக்கறவரைக்கும் மத்தவங்களையும் சந்தோஷபடுத்தி நாமும் சந்தோஷமா வாழ்வோம்:):):)<br />வாழ்க்கை வாழ்வதற்கே!!!Don't worry!!!!Be happy!!!!Enjoy every moment of life!!!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-81602780394685104562010-09-27T11:25:00.002+05:302010-09-27T11:29:06.022+05:30பதிவுலகத்திற்கு தற்காலிக டாட்டாநான் என் சொந்த ஊருக்கு செல்வதால் (அட அதிசயமா அங்கேயே வேலை கிடைச்சுடுச்சுங்க....ஹி..ஹி) பதிவுலகத்திர்க்கு தற்காலிகமா என்னோட டாட்டா.எல்லாரும் சந்தோஷமா இருங்க.Bye bye!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-25472663017937769822010-09-22T15:04:00.009+05:302010-09-22T15:27:54.042+05:30இயற்கையை ரசிக்க கத்துகிட்டேன்....வாழ்வையும் சேர்த்து!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkAvfiHmSbk7sRvfkmVazT-zPleMlV5fqm7scmdYfHnfiXlBpl3xIRf2ErI04XKoLkHNnI1UK60AjbwyTDmuZJfbzpCwMWXR7Uo2bgVWHEcLAY3wMhKWu3EG_OLPIm1eNDQjBQGehWc0B4/s1600/dawn-breaks.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 97px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkAvfiHmSbk7sRvfkmVazT-zPleMlV5fqm7scmdYfHnfiXlBpl3xIRf2ErI04XKoLkHNnI1UK60AjbwyTDmuZJfbzpCwMWXR7Uo2bgVWHEcLAY3wMhKWu3EG_OLPIm1eNDQjBQGehWc0B4/s200/dawn-breaks.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5519673123397161906" border="0" /></a><br />அப்போ நான் 10 ஆம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.எங்களுக்கு பிரின்சிபால் அப்போல்லாம் இங்கிலீஷ் பாடம் சொல்லிகொடுக்க வாரம் ஒரு வகுப்பிற்கு(period) வருவார்கள்.இங்கிலிஷ்க்கு எங்களுக்கு வேற ஒரு ஆசிரியை இருந்தாங்க.இருந்தாலும் எங்க ப்ரின்சிபாலோட தனிப்பட்ட ஆர்வத்துல அவங்களே சில சமயம் பாடம் எடுப்பாங்க.பிரின்சிபால்ன்னு எந்த ஒரு கெடுபிடியோ,ஆர்ப்பாட்டமோ,ஆதிக்கமோ இல்லாத அற்புதமான மனுஷி.அவங்க கிளாஸ்க்கு வர்ற அந்த வகுப்புக்காவே காத்துகிட்டு இருப்போம். ஏன்னா பாடத்த பாடமா சொல்லாம கதை மாதிரி ரசிக்கும்படியா சொல்வாங்க.<br /><br />அப்படி ஒரு நாள் அவங்க பாடம் நடத்தும்போது விடிகாலையைப்பத்தி பேச்சு வந்தது.அவங்க சொன்னாங்க (இங்கிலிஷ்லத்தான்) "நானும் பல வருஷமா விடியற்காலையிலே வானத்தை பாத்துகிட்டே இருக்கேன்.அது இருள்சூழ்ந்து இருக்கும்....ஆனா கண்ணிமைக்கிற நேரத்துல வெளுத்துபோயிடுது.அது எப்படின்னு யோசிப்பேன்.இன்னிக்குவரைக்கும் பதில் கிடைக்கல. இயற்கையோட அழகே அழகுதான்.இத இதுவரைக்கும் <span>யாராவது </span>கவனிச்சதுண்டா? "னு.அப்போதான் யோசிச்சேன்<br />பொழுது விடியர்துன்றது தினமும் நடக்குற ஒரு நிகழ்வு.ஆனா அதையும் ரசிச்சு கலைகண்ணோட பாக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.<br />அதுக்கப்புறம் ஒரு நாள் நிஜமாவே ஒரு காலை பொழுதில் உட்கார்ந்து பார்த்தேன்.ஆம் எல்லாமே ஒரு நொடியில் மாறுது.இருள் சூழ்ந்து இருக்கும் வானம் ஒளி படர்ந்து காட்சி கொடுக்குது.இதே போலத்தான் நம்ம வாழ்க்கைல வர்ற கஷ்டங்களும் அந்த இருளைப்போல இருந்த தடம் தெரியாம மறைஞ்சுடும்னு நம்ப ஆரம்பிச்சேன்.<br /><br />இப்போ அவங்க எங்கே எப்படி இருக்காங்கனு தெரியாது.ஆனா எனக்கு வாழ்க்கைய ரசிக்க கத்துகொடுத்தவங்கள்ள அவங்களும் முக்கியமான ஒருத்தர்.Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-44055581262071584382010-09-21T13:55:00.002+05:302010-09-21T14:26:33.867+05:30கவிதைகள்-II<span style="font-weight: bold;">போதை</span><span style="font-weight: bold;">!</span><br /><br />அன்பும்,<br />பாசமும்<br />ஒருவிதத்தில்<br />போதைதான்<br />அதை<br />இழக்கமுடியாமல்<br />மனம்<br />தள்ளாடுகிறதே!<br /><br /><span style="font-weight: bold;">பற்று</span><span style="font-weight: bold;">!</span><br /><br />பற்றற்று வாழ்<br />மரணத்திற்கு<br />பின் சொர்க்கம் செல்வாய்<br />என்கிறது<br />சாஸ்திரம்;<br />சொர்கலோக<br />வாழ்வை<br />நாடுவதே<br />ஒரு<br />பற்றல்லவா???!!!!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-65783083225248805222010-09-17T12:39:00.002+05:302010-09-17T12:51:43.802+05:30நான் ரசித்த பாடல் வரிகள்!!!நான் ஒரு பாட்ட கேட்கறதுக்கு மியூசிக்,பிடிச்ச ஹீரோ நடிச்ச பாடல் இப்படி பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் அந்த பாடலோட வரிகள்.<br />அப்படி நான் ரசிச்ச சில பாடல் வரிகள்தான் இங்கே கொடுத்திருக்கேன்.<br /><br />அட்டகாசம் படத்துல "தீபாவளி"ங்குற பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்<span></span><span></span>:<br />"ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்,<br />ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்துவந்தா ஒரே தோளில் ஏற்றி வைக்கும்"<br />எப்போவும் தன்னம்பிக்கையும்,சாதிக்கணும்கிற எண்ணத்தையும் விதைக்கிற வரிகள்.<br /><br />ரெட் படத்துல "கண்ணை கசக்கும்" பாட்டுல <span>எனக்கு</span> <span>பிடிச்ச</span> <span>வரிகள்:<br />"</span><span>உலகத்தை</span> <span>நேசி</span> <span>ஒருவரையும்</span> <span>நம்பாதே</span>;<span>உறங்கிய</span> <span>போதும்</span> <span>ஒரு</span> <span>கண்ணை</span> <span>மூடாதே</span>".இந்த உலகம் இப்போ இருக்குற நிலைமைல நம்மள விழிப்பா இருக்கணும்னு சொல்ற வரிகள்.<br /><br />காதல் வைரஸ் படத்துல "எந்தன் வாழ்வின்" <span>பாட்டுல</span> <span>எனக்கு</span> <span>பிடிச்ச</span> <span>வரிகள்:<br />"</span><span>காதல்</span> <span>ஒன்றும்</span> <span>காயமல்ல</span> <span>காலபோக்கில்</span> <span>ஆறிபோக</span>","என்னைவிட்டு போனது அமைதியன்றோ;நீயுமில்லா நானுமோர் அகதியன்றோ".ஆஹா காதலோட வழிய சொல்ற அருமையான வரிகள்.<br /><br />சிகரம் படத்துல "அகரம் இப்ப" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:<br />"நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்கை உள்ளது".இந்த பாடல் முழுக்க தன்னம்பிக்கை சிந்தனைகள் இருந்தாலும் இந்த ரெண்டு வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.<br /><span><br /></span>Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-68359978674604454062010-09-16T10:39:00.004+05:302010-09-16T10:54:07.297+05:30விளம்பரமா காமெடியா?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQXy-mp1UoETIkQ9pOSMyoETi4FjnoitRqdVjEM4CRTWRWHddW8lEVVcJdS3oQqg6Rso6gGXIcNFQzwT9h0jsYpcvWpOaxRG9Osw7M55y56ObOO-H2QuML5lDign59o-HzSaNjJX8mYKnS/s1600/sharon_tnp.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 160px; height: 200px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQXy-mp1UoETIkQ9pOSMyoETi4FjnoitRqdVjEM4CRTWRWHddW8lEVVcJdS3oQqg6Rso6gGXIcNFQzwT9h0jsYpcvWpOaxRG9Osw7M55y56ObOO-H2QuML5lDign59o-HzSaNjJX8mYKnS/s200/sharon_tnp.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5517376689305666178" border="0" /></a><br />இப்போ நான் சொல்லபோறது sharon plywoods விளம்பரத்தபத்திதான்.<br />ஒருத்தர் யானை தும்பிக்கையை தூக்கிப்பார்த்து அங்கிருந்து சில இடங்கள் எவ்ளோ தூரத்துல இருக்குனு துல்லியமா சொல்றாரு.அதுக்கு அவரிடம் வழிகேட்ட<span> ரமேஷ்</span> கண்ணாவும் எப்படியா யானையின் தும்பிக்கையை பார்த்து கரெக்டா சொல்றேன்னு கேட்டா தும்பிக்கையை தூக்கி அங்கே NH distance காட்ற போர்ட காட்றாரு."சின்ன விஷயத்துக்கு பெரிசா யோசிக்காதிங்க"ன்னு வாசகம்.நல்லா இருந்துச்சு.<br /><br />இது கொஞ்ச நாள் முன்னாடி எதோ ஒரு படத்துல காமெடில வந்தாப்ல இருக்கு.<br />ஒரு கழுதை வாலை தூக்கி மணி கரெக்டா சொல்வாரு ஒருத்தர்(யார்னு ஞாபகம் இல்ல).அவரை பெரிய புத்திசாலியா நினைச்சு பாராட்டிற்றுக்கும்போது அந்த வாலை தூக்கி அங்கிருக்கும் மணிக்கூண்டை காட்டுவார்.அந்த காமெடிதான் இப்போ இந்த விளம்பரம் பாத்தா நினைவுக்கு வருது.Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-60154628193466695492010-09-16T09:24:00.005+05:302010-09-16T09:47:19.759+05:30கவிதைகள்!<span style="font-weight: bold;">அன்னை</span><span style="font-weight: bold;">!</span><br /><br />உருவற்று கிடந்த எனக்கு<br />உடல் கொடுத்தவள்,<br />உணவற்று தவித்த எனக்கு<br />தன் உதிரத்தையே பாலாக்கியவள்,<br />கல்வியறிவற்று திரிந்த எனக்கு<br />பள்ளியனுப்பி பாடம் புகட்டியவள்,<br />என் வளமான வாழ்வுக்கு<br />அடித்தளம் அமைத்தவள்<br />இன்று அவள்மட்டும்<br />தனிமரமாய்<br />எங்கள் சொந்த கிராமத்தில்,<br />நானோ நாகரிகம்<br />தந்த சுகவாழ்வுடன்<br />அயல்நாட்டில்!!!!<br /><br /><span style="font-weight: bold;">மனம்</span><span style="font-weight: bold;">!</span><br /><br />மனித மனம்<br />ஒரு<br />குரங்காம்,<br />யார் கூறியது?<br /><span>இதோ<br /></span>என் மனம்<br />வேறு யாரிடமும்<br />தாவாமல்<br />அவளை மட்டுமே<br />வட்டமிடுகிறதே!<br /><br /><span style="font-weight: bold;">சிறைப்பறவை</span><span style="font-weight: bold;">!</span><br /><br />சுதந்திர வானில்<br />சுற்றிதிரியும்போது<br />என்றேனும் ஒரு நாள்<br />வேடனிடம்<br />அடிபட்டு இறப்பதைவிட<br />என் ஆயுட்காலம் முழுவதும்<br />உன் நெஞ்சக்கூட்டில்<br />சிறைப்பறவையாய்<br />வாழ்வதே மேல் அல்லவா???!!!<br /><br /><span style="font-weight: bold;">கவிஞன்</span><span style="font-weight: bold;">!</span><br /><br />அவன்<br />ஒரு<br />சிறந்த கவிஞனாம்<br />நான் அதை ஏற்கமாட்டேன்<br />அவன் இதுவரை<br />உன் விழிகளை<br />வர்ணித்ததே இல்லையே???!!!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-35325152044598776432010-09-15T15:12:00.005+05:302010-09-21T16:52:09.453+05:30என்னமா யோசிக்கிறாங்க....!!இது சமீபத்துல பார்த்து ரசிச்ச 2 விளம்பரங்கள பத்தின பதிவு.<br /><span style="font-weight: bold;">1</span><span style="font-weight: bold;">.</span><span style="font-weight: bold;">Idea</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மொபைல்</span><span style="font-weight: bold;">:</span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKFX-TXflj07F3OWp-BJjTGg3skV7av_IOssSQjsQ07YD2aC4dEQa75KoQH5dWq4UJr0w5zymt9qBIw6mMKBEVNIt-mCzz3CYL8vi2sJ7yY2wNud7pFzTZWDcA7XgCJytp8N56iNfnbNT4/s1600/Idea.png"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 144px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKFX-TXflj07F3OWp-BJjTGg3skV7av_IOssSQjsQ07YD2aC4dEQa75KoQH5dWq4UJr0w5zymt9qBIw6mMKBEVNIt-mCzz3CYL8vi2sJ7yY2wNud7pFzTZWDcA7XgCJytp8N56iNfnbNT4/s200/Idea.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5517074557923177362" border="0" /></a>நான் சொல்ற விளம்பரம் லேட்டஸ்ட்டா அவங்க கொண்டு வந்தது."அபிஷேக் பச்சன் வாய் பேச முடியாதவர்.ஒரு டீ கடையிலே பல பேர் வேலை விஷயமா மொழிதெரியாத இடத்துக்கு போறதா காட்டிட்டு அவங்க மொழிப்பிரச்சினைக்கு அபிஷேக் தீர்வு சொல்றா மாதிரி இருக்கு.அவர் போன்லயே எல்லாரோட மொழிப்பிரச்சனையும் தீர்த்து "Idea"விலே குறைந்த ரேட்ன்னு சொல்லாம சொல்றார்".சாலமன் பாப்பையா ஸ்டைல்லே சொன்னா அருமைய்யா.எனக்கு அந்த விளம்பரத்தோட புகைப்படம் கிடைக்காததால எதோ எனக்கு தெரிஞ்ச அளவு explain பண்ணி இருக்கேன்.<br /><span style="font-weight: bold;">2</span><span style="font-weight: bold;">.</span><span style="font-weight: bold;">டைரி</span><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;">மில்க்</span><span style="font-weight: bold;">:</span><br /><span><span style="font-weight: bold;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYhDSIr_It666bAArZml1YJE24AcS6YIT_vKkT8UbGiLSIg_BQ6whyxduB_fkvUaQYgknA8c_W3HNICWX5o_jsBcPf4vn4WBdmaL21IPl9UfSNmqUgklwDgwJsYZb7v4bbsXBdOivBfZeM/s1600/Diary+milk.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 142px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYhDSIr_It666bAArZml1YJE24AcS6YIT_vKkT8UbGiLSIg_BQ6whyxduB_fkvUaQYgknA8c_W3HNICWX5o_jsBcPf4vn4WBdmaL21IPl9UfSNmqUgklwDgwJsYZb7v4bbsXBdOivBfZeM/s200/Diary+milk.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5517076533065819042" border="0" /></a></span></span><br /><br />ஒரு நடுத்தர வயது வாலிபன் அவர் மனைவிக்கு ஜீன்ஸ் போட்டு அழகு பார்க்க நினைக்குறாரு.ஆனா அந்தம்மா கூச்சம் காரணமா வெளிய வரமாட்டேன்குறாங்க.டைரி மில்க் சாப்பிட்டதும் ஒரு இனிய ஆரம்பமா அவங்க தயக்கத்தைவிட்டு தன கணவனின் ஆசைக்காக வெளியே வராங்க.அவங்களை வெளியிலே சந்தோஷமா ஒரு வாலிபன் வரவேற்கும்படி நன்றாக உள்ளது.Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-40597484805819114182010-09-15T10:50:00.003+05:302010-09-15T12:11:17.138+05:30கவிதை!காதலித்தால் கவிஞனாகிவிடலாமாம்<br />யாரோ சொன்னார்கள்;<br />ஏன் நட்பின் பிரிவிலும்<br />கவிதை எழுதலாம்;<br />நம்பவில்லையா?<br />இதோ நாள்தோறும்<br />என் டைரியில்<br />உன் பெயரை மட்டுமே<br />கிறுக்கி தள்ளுகிரேனே!!!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-70838295010221403172010-09-15T09:51:00.001+05:302010-09-15T09:53:41.786+05:30என்னவளே!என் புன்னகைதான்<br />என்னிடத்தில்<br />உனக்கு <span>பிடிக்கும்<br /></span> என நன்றாக தெரியும்<br />எனக்கு;<br />அதனால்தானே<br />அதைமட்டும்<br />என்னிடமிருந்து<br />கவர்ந்து சென்றாய்???!!!!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-89994301959603146902010-09-13T10:28:00.002+05:302010-09-13T10:40:43.599+05:30ஸ்வர்ணலதாவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி!!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0N-xYFuWcmluSxw8UF3Imp1C6xbs6MWC8KuYyrCXJ9UfoECXM_hCRjUIWkvrqwRzVNvWy5018iUhMxdNH7puBwbQS1pfmP6kV1hPGk-DfrnS9PWLsk2aL02RZg9nsWjcpbzZvrBllkbj9/s1600/Swarnalatha.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 140px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0N-xYFuWcmluSxw8UF3Imp1C6xbs6MWC8KuYyrCXJ9UfoECXM_hCRjUIWkvrqwRzVNvWy5018iUhMxdNH7puBwbQS1pfmP6kV1hPGk-DfrnS9PWLsk2aL02RZg9nsWjcpbzZvrBllkbj9/s200/Swarnalatha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5516258973200802418" border="0" /></a><br />"எவனோ ஒருவன்" பாடலில் என் உள்ளம் கரைத்த குரலழகி ஸ்வர்ணலதா இன்று நம்முடன் இல்லை.இளைய வயது பிரமுகர்களெல்லாம் இறைவனடி சேறும் காலம் போலும்.முதலில் நடிகர் முரளி(46),இப்போது இவர்(37).இவர் 1989ம் ஆண்டு திரையுலகத்திர்க்கு வந்தார்.திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்த இவருக்கு 37 வயது.நுரையீரல் பாதிப்பால் நேற்று காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார்.<br /><br />இந்த தலைசிறந்த பாடகி தன் மந்திர குரலால் பலரை கட்டி போட்டுள்ளார் என்பது உண்மை.எத்தனை பாடல்கள்."குயில் பாடு","போறாளே பொன்னுதாய்","பூங்காற்றிலே",...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.தேசிய விருது வாங்கியவர்.<br /><br />இவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.என் மனமார்ந்த அஞ்சலிகள்!!!Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-9002069913756626422010-09-08T15:27:00.007+05:302010-09-08T15:46:10.720+05:30நன்றி!!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglsV3bOlf6P7MkDxUt2TQvnqcPGLK7_H_r_6KNWXnlchd9S9wu0uFs2Z-fNJGI_e2peqzft5YaqYLyXdc3b88rQFdtsmo9cK43msO93eWceACTLLmd2jM6icvVKErypF2jQ5PKTzXe-eHa/s1600/Thankyou.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 142px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglsV3bOlf6P7MkDxUt2TQvnqcPGLK7_H_r_6KNWXnlchd9S9wu0uFs2Z-fNJGI_e2peqzft5YaqYLyXdc3b88rQFdtsmo9cK43msO93eWceACTLLmd2jM6icvVKErypF2jQ5PKTzXe-eHa/s200/Thankyou.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5514480068946612098" border="0" /></a>இது என் 25வது பதிவு.(அவனவன் சத்தமே இல்லாம 100 200 னு போய்கிட்ருக்கான் 25கே இப்படியா?)ஹி ஹி:):)<br /><br />இதுவரை எனக்கு பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!என் முதல் Follower ஆன "அப்பாவி தங்கமணி" அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.ஏனெனில் இனி பின்னூட்டமும் பின்தொடர்பவர்களும் இல்லையெனில் நான் எழுதுவதை(ப்ளாக்) நிறுத்திவிடலாம் என்றிருந்தேன்.(நீங்கல்லாம் தப்பிச்சிருப்பீங்க...ஹ்ம்ம் என்ன பண்றது?)எனக்கும் (என் எழுத்துக்கு) மதிப்பு கொடுத்து என்னையும் follow பண்ணும் 5 நல்ல உள்ளங்களுக்கும்(அப்பாவி தங்கமணி,L.K, S.K,வித்யா,மின்மினி.காம்), தமிளிஷ்(இன்ட்லி)-இல் follow பண்ணும் இருவருக்கும்(RDX,YUvaetff) நன்றி ஹை!என் ப்ளாகை படித்து பின்னூடமிடாதவர்களுக்கும் நன்றி(இனிமேலாவது ஏதாவது பின்னூட்டம் போடுங்கப்பா,இல்லன்ன தமிழ்மணம்,இன்ட்லி இப்படி எதிலயாவது வோட்ட குத்துங்க).Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-23706962617804026332010-09-08T09:41:00.012+05:302010-09-08T14:10:16.233+05:30நடிகர் முரளிக்கு அஞ்சலி!!!:(:(<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmVvIV3u8hsgBDN9ShXw3wq-aa057VeYVj2qCHPDlPtNDjQaKeKoWz_wpl5eff064rgSM02aFH501ynrxetCHUV21QIW0RI-p5oMvV-63NxFxiG_tHVOKsx-7-lFhpWUgKnnM0TmFebfLo/s1600/Murali.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 160px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmVvIV3u8hsgBDN9ShXw3wq-aa057VeYVj2qCHPDlPtNDjQaKeKoWz_wpl5eff064rgSM02aFH501ynrxetCHUV21QIW0RI-p5oMvV-63NxFxiG_tHVOKsx-7-lFhpWUgKnnM0TmFebfLo/s200/Murali.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5514390866340399506" border="0" /></a><br />முரளி....பூவிலங்கு திரைப்படம் மூலம் திரைஉலகிர்க்கு வந்து வெற்றி நாயகனாய் வலம் வந்தவர்.46 வயதாகும் இவர் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.இவர் வெற்றிக்கொடிகட்டு,இதயம்,பகல் நிலவு போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் சிவாஜி,பிரபு,பார்த்திபன்,சூர்யா,சரத்குமார்,மம்மூட்டி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவரது<span> மகன்</span> அதர்வா நடித்த முதல் படமான "பானா காத்தாடி" இவருக்கு கடைசி படமாக அமைந்தது வருத்ததிற்குரியது.இவர் தந்தை கன்னடர்,தாய் தமிழ்.இவர் திருமணம் காதல் திருமணம்.இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.<br />சமீபத்தில் மகன் அதர்வாவுடன் "காபி வித் அனு" நிகழ்ச்சியில் பங்கேற்று மிக சிறப்பாக உரையாடியது இன்னும் கண்களில் உள்ளது.இந்த நிகழ்ச்சிக்குப்பின் என்னை வெகுவாக கவர்ந்தார்.<br /><span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitcGik9IAZs1Uh3YL-zzHATarcFBQXl891tWgU8HA7gPTAqC9nPwvTsjnjRRboDR02lFw3EdMVEaCq1Og_gpahWy6qHSDApvI8pOe9WimQ3QAUADrwU4MeUqkq1NJ2LBkLsgDgeBSUwnm7/s1600/images.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 200px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitcGik9IAZs1Uh3YL-zzHATarcFBQXl891tWgU8HA7gPTAqC9nPwvTsjnjRRboDR02lFw3EdMVEaCq1Og_gpahWy6qHSDApvI8pOe9WimQ3QAUADrwU4MeUqkq1NJ2LBkLsgDgeBSUwnm7/s200/images.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5514393226109337106" border="0" /></a></span><br /><br />இந்த மிகசிறந்த நடிகருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!!!:(:(:(Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1001241269419101304.post-77613984521774780952010-09-01T11:58:00.007+05:302010-09-01T12:10:35.023+05:30ஸ்ரீ பாதம்!!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlVToUa9LjXJuAzuc1zUEZiWhg1TtvrUKwmk4iUcNnbmhLP3Uqy5yLluNgvbt9-eNKHDCcgmcBU0BbsVjw7ICH67KNFbvYZEd-EDznMQjaEY9J3FDgPrxb410nrWn4Xce0I_CxPeK-hGJk/s1600/Sripadham.jpeg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 120px; height: 121px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlVToUa9LjXJuAzuc1zUEZiWhg1TtvrUKwmk4iUcNnbmhLP3Uqy5yLluNgvbt9-eNKHDCcgmcBU0BbsVjw7ICH67KNFbvYZEd-EDznMQjaEY9J3FDgPrxb410nrWn4Xce0I_CxPeK-hGJk/s200/Sripadham.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5511828946196032226" border="0" /></a><br />கிருஷ்ண ஜெயந்தின்னு சொன்னாலே நம்ம ஞாபகத்துக்கு வர்றது பூஜை செய்றது,பட்சணம் பண்ணறது,முக்கியமா பாதம் போடுறதுதான்.இந்த பாதம் பிறந்த குட்டி கிருஷ்ணர்துன்னு பலர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க.(ஏன் முதல்ல நானும் அப்படிதான் நினைச்சேன்). சிலர் தங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளோட பாதங்கள மாவுல நனைச்சு பாதம் போடுறதை பாத்திருக்கேன்.ஆனால் அது அப்படி இல்லை.<br /><br />திருமால் இருக்கும் எல்லா இடத்திலையும் மகாலட்சுமியும் குடிஇருப்பா.அந்த பாதமும் கிருஷ்ணரோட பாதம் இல்ல, அதற்கு பேர் "ஸ்ரீ பாதம்".மகாலக்ஷ்மியோட கால் தடம்.ஐஸ்வர்யத்தோட முகவரி.<br />இந்த தகவலோட இந்த வருஷ "கிருஷ்ண ஜெயந்திய" கொண்டாடுங்க.<br /><br />டிஸ்கி:இந்த தகவல் "ரேவதி சங்கரன்" அவர்கள் "சூப்பர் மாம்" நிகழ்ச்சிக்காக விஜய் டிவில சொன்னது இது.தெரியாதவங்களுக்கு பயனுள்ளதா இருக்குமேன்னுதான் இந்த பதிவு.Thenralhttp://www.blogger.com/profile/00825827646898117651noreply@blogger.com0