
"எவனோ ஒருவன்" பாடலில் என் உள்ளம் கரைத்த குரலழகி ஸ்வர்ணலதா இன்று நம்முடன் இல்லை.இளைய வயது பிரமுகர்களெல்லாம் இறைவனடி சேறும் காலம் போலும்.முதலில் நடிகர் முரளி(46),இப்போது இவர்(37).இவர் 1989ம் ஆண்டு திரையுலகத்திர்க்கு வந்தார்.திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்த இவருக்கு 37 வயது.நுரையீரல் பாதிப்பால் நேற்று காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார்.
இந்த தலைசிறந்த பாடகி தன் மந்திர குரலால் பலரை கட்டி போட்டுள்ளார் என்பது உண்மை.எத்தனை பாடல்கள்."குயில் பாடு","போறாளே பொன்னுதாய்","பூங்காற்றிலே",...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.தேசிய விருது வாங்கியவர்.
இவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.என் மனமார்ந்த அஞ்சலிகள்!!!

1 comment:
Enathu Abimana padaki.
Enathu anjalikal.
vasan
Post a Comment