ஓர்
சாமான்யனை
தத்துவ மேதையாக,
ஆகச்சிறந்த
சிந்தனையாளராக
மாற்றவல்லது
இந்த
மை அருந்தும்
கருவி...🖊
நினைக்கும்
மனிதனைப் பற்றி?
மொட்டைமாடியில்
வற்றலிடும்போதோ
விரட்டியடிக்கிறோம்...
அமாவாசை
நாட்களிலோ
கூவி
அழைக்கிறோம்....
நாகரிகம் எனும் பெயரிலும்
நிலத்தடி நீர்
முற்றிலுமாக
உறிஞ்சப்படுவதையும்
விளைநிலங்கள்
பாலைகளாக
உருமாற்றம் செய்யப்படுவதையும்
கோபக்கனலுடன்
பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்
நம் ஊர் எல்லைச்சாமிகள்..
மெய்நிகராகட்டங்களிலோ
காதொலிப்பான் பாடல்களிலோ
லயித்துப் போகும்
இன்றைய குழந்தைகளுக்கு
புரிவதில்லை
ஜன்னலோர ஈரக் காற்றின் சம்பாஷணைகளும்
பறவைகளின் கீச்சொலிகளும்
உடன் பயணிக்கும் வெள்ளி நிலவும் பின்னோக்கி பயணிக்கும் தாவரங்களும் எவ்வளவு ரசனையானவை என்று...
Hi மக்களே! திரும்பவும் வலைப்பதிவுலக பக்கம் வந்துவிட்டேன். சில சொந்த வேலைகள் காரணமாக தற்காலிகமா விலகி இருக்க நினைச்சு சில வருடங்கள் ஓடிவிட்டது... நம்ம மதராஸ் உருவான தினம் நம்ம பயணத்தை தொடருவோமாக...
Instagram reels, YouTube shorts என உலகம் மிக வேகமாய் சுற்றுகிறது. ஆயினும் என் மனதிற்கு எழுத்தே இதம்.
இனி அடிக்கடி பதிவுகள் மூலம் சந்திப்போம்...நன்றி🙏