காதல் ஒரு அழகான வார்த்தை!காதல்னா ஒரு ஆண் ஒரு பெண் மேலையோ இல்ல ஒரு பெண் ஆண் மேலையோ காட்ற அன்பு மட்டும் இல்ல.நான் இங்கே சொல்ல போற காதலே வேற.காதல்ன்ற வார்த்தைக்கு அர்த்தமே ஆழமான விருப்பம்,அதீத அன்புதான்.பிள்ளைகள் பெற்றோர் மீது காட்டும் அன்பு,பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் பரிவு,அக்கறை,குடும்பதினருக்குள்ள இருக்கிற பாசம்,ஒற்றுமை,இவ்வளவு ஏன் ஒரு மனுஷன் சக மனுஷன் மேல காட்டுற மனிதாபிமானம்,நாம இயற்கையை ரசிக்கிறது எல்லாமே காதல்தான்.காதல் இல்லனா வாழ்க்கை போர் அடிச்சிடும்.நாம செய்யுற வேலையகூட காதலிச்சு செஞ்சாதான் சிறப்ப செய்ய முடியும்.
நமக்காக ஒருத்தர் இருக்காங்க,நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிச்சிடலாம்ன்ற நம்பிக்கை கொடுக்கிறதுதான் தான் காதல்.அதனால எல்லாரும் காதலியுங்கள்,உங்கள் குடும்பத்தை,சுற்றத்தை,நட்பை,சக மனிதர்களை, கடவுள் நமக்கு வரமாக தந்த இயற்கையை.அன்பை கொடுத்து அன்பை பெரும் சுகம் சொல்லில் அடங்காது.அனுபவித்து பாருங்கள்!இந்த உலகத்தை, உங்கள் வாழ்க்கையை நேசியுங்கள்!