படம்:விண்ணை தாண்டி வருவாயா
பாடியவர்கள்:ஏ.ஆர்.ரஹ்மான்,ஸ்ரேயா கோஷல்
இசை:ஏ.ஆர்.ரஹ்மான்
பெண்:கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்
துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமேஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா...
ஆண்: கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழை ஆகிபோனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்க்கிராயே...
மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன் ஓஒ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..(ஒரு நாள்...)
பெண்:ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே
ஆண்:காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே (ஒரு நாள்...)
chorus: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் பூசல் தரும்,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு ,
புலம்பல் என சென்றேன் புல்லினேன்
நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு
பெண்:ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவென்னும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் (ஒரு நாள் ....)
No comments:
Post a Comment