இது நான் 7th std படிச்சுகிட்டு இருந்தப்போ நடந்தது.எனக்கு எங்க schoola ரொம்ப பிடிக்கும்.(யாருக்குதான் பிடிக்காது?னு நீங்க கேட்குறது புரியுது).எனக்கு moral values பத்தி சொல்லிகொடுத்தது எங்க ஸ்கூல்தான். நான் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்(நம்புங்கப்பா) கிட்டத்தட்ட ஒரு 3 ரேங்க்குள்ளே வந்துருவேன்.எனக்கு சுமாரா படிக்கிற ஒரு friend இருந்தா.அன்னிக்கு progress ரிப்போர்ட் கொடுத்துகிட்டு இருந்தாங்க.அந்த பொண்ணு நாலு subjectல அவுட்(அதான் fail).
நான் செகண்ட் ரேங்க் எடுத்திருந்தேன்.என் பக்கத்துல உட்கார்ந்திருந்தா அந்த பொண்ணு.மிஸ் அவல எழுப்பி "இவ உன் பிரெண்டா?"(என்ன காமிச்சு)னு கேட்டாங்க.அவளும் சாதாரணமா "ஆமா"னு சொன்னா.உடனே மிஸ் அவகிட்டே "வெளிய எங்கேயும் இப்படி சொல்லிடாதே அவளுக்குத்தான் அவமானம்"னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டாங்க.எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.பின்ன என்னங்க moral valuesக்காக நான் பார்த்து பார்த்து வியந்த பள்ளியில் இப்படியொரு சம்பவம்.படிக்கலைன்றது ஒரு கொலை குத்தம் இல்லையே?அவங்கவங்களுக்கு என்ன திறமை இருக்கோ அதை போற்றலைன்னாலும் அவங்க இயலாமையை கிண்டல் பண்ண கூடாதுங்கறது என் எண்ணம்.அவங்க அவளை தனியா அழைச்சுட்டுபோய் சொல்லி புரியவச்சிருக்கலாம்.இப்படி எல்லோர் முன்னிலையிலும் அப்படியொரு வார்த்தை அவளை எவ்ளோ காயப்படுதியிருக்கும்னு நினைச்சாலே இப்போவும் கஷ்டமா இருக்கு.
அதனாலே பிள்ளைகளை கண்டிப்பதிலும் ஒரு பாசத்தோட ஒரு அணுகுமுறையை கடைபிடிக்கலாமே!நிச்சயம் அவங்க எதிர்காலம் வளமையானதா இருக்கும்!
Thursday, August 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment