Friday, July 30, 2010
அங்காடி தெரு-என் பார்வையில்!
அங்காடி தெரு...
வலையுலகமே கொண்டாடின படம்.நான் எப்போவோ பாத்துட்டேன்.ஆனா இவ்ளோ நல்ல படத்துக்கு detailஆ பதிவு போடணும்னு நினைச்சேன்.அதான் late. எனக்கு ரொம்ப பிடிச்சது.மகேஷ்-அஞ்சலி பொருத்தமான தேர்வு.மற்ற கதாபாத்திரங்களும் நடிக்கல வாழ்ந்திருக்காங்க.படம் ஆரம்பிக்கும்போதே 'கதைகளை பேசும்...' பாட்டு நம்மள படத்தோட ஒன்றவச்சுருக்கு.அவங்களோட அந்த வறுமையிலும் அவங்களோட விளையாட்டுக்கள்,வெங்கடேஷ அவங்க கலைக்கிற பாங்கு எல்லாமே சூப்பர்.வாழ்க்கை வாழ்வதற்கே!ஆனா அந்த accidentக்கு அப்புறம் அவங்களோட வாழ்க்கைமுறை எல்லாரோட பரிதாபத்தையும் அள்ளிட்டுபோய்டும்.வருமையினாலே ஒரு மனுஷன் என்னா பாடு படறான்னு தெளிவா காமிச்சுருக்கார் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள்.black பாண்டி as usual காமெடியில பின்றாரு.தமிழுக்கு ஒரு நல்ல காமெடியன் ரெடி.அவர் தமிழ் தாய் வாழ்த்த காதல் கவிதையா எழுதிகொடுக்கும்போது நம்மால சிரிப்பா நிச்சயம் அடக்கமுடியாது.congrats paandi!அந்த கண்ணு தெரியாத பெரியவர்,குள்ளமா இருக்கறவரு,அவர் மனைவியா வர்றவங்க,கனியோட ப்ரெண்டா வந்து செத்துபோற அந்த பொண்ணு,உழைச்சுதான் சாப்பிடுவேன் பிச்சை எடுக்கமாட்டேன்னு வைராக்யமா பப்ளிக் toiletஅ clean பண்ணி பிழைப்பு நடத்துபவர்னு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்காரு மனுஷன்.வசந்தபாலன் சார்,உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாட்டு ஒண்ணொண்ணும் ஒரு விதம்.எல்லாமே சூப்பரப்பு.'அவள் அப்படி...' lyrics பின்னிட்டீங்க பாஸ்.'எங்கே போவேனோ...' குரல்லயே காதலோட வலிய பிரம்மாதமா வெளிப்படுதியிருக்காங்க (பென்னி,பாலாஜி,ஜானகி ஐயர்).
அந்த சின்ன பொண்ணு வயசுக்கு வந்ததும் ஆச்சாரம்னு சொல்லி நாய் கட்டிபோடுற இடத்துல தூங்க வைக்கிறது கொடுமை.இன்னும் பல இடங்கள்ள நடக்குது...மனசு வேதனையா இருக்கு.அந்த கோவில்ல அவங்கள அரவணைக்கிற பண்பு மனுஷத்தன்மைன்னு ஒண்ணு இன்னும் இந்த உலகத்துல இருக்குனு காட்டுது.சிநேகா சிநேகமா வந்துட்டு போறாங்க.கிளைமாக்ஸ் first class.அஞ்சலி அவங்கள மகேஷ் விட்டுட்டுபோயடுவார்னு நினைக்குறப்போ அவர் சொல்ற வசனமும் அதுக்கு ரெண்டுபேரும் கொடுக்குற முகபாவனையும் அய்யோ! புதுமுகமான்னு கேட்க தோணுதுங்க மகேஷ பாத்து.
மொத்தத்துல ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுதுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment