Thursday, July 15, 2010

நான் ரசித்த திரைப்படங்கள்-I

வணக்கம்!இப்போ நான் ரசிச்ச சில படங்கள பத்தி இங்கே ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.நானும் சின்ன வயசுலேர்ந்து சினிமா பார்த்தே வளர்ந்ததனாலே தமிழ் சினிமா மேல ஒரு அலாதி பிரியம்.அதனாலே லிஸ்ட் கொஞ்சம் பெரிசா இருக்கும்.இத ஒரு தொடர் மாதிரி part part-ஆ போடலாம்னு இருக்கேன்...

1.மௌன ராகம் :
இது மணிரத்தினம் படம்ட்ரதாலையே ஒரு ஈர்ப்பு வர்றது நிஜம்.ஒரு matured லவ் ஸ்டோரி.மோகன் பல படங்கள்ல மைக் பிடிச்சு பார்த்த நமக்கு இதுல வர்ற கேரக்டர் ரொம்ப புதுசு.அழகா அடக்கி வாசிச்சிருப்பார். ரேவதி அவங்க கதாபாத்திரத்தை உணர்ந்து நல்ல நடிச்சிருப்பாங்க.கார்த்திக் சொல்லவே வேண்டாம்.இந்த படத்துக்கப்புரம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்திருக்கும்.'சந்திரமௌலி'ங்கிற பேரை கேட்டு யாராலாவது கார்த்திக்கை நினைக்காம இருக்க முடியுமா?கிளைமாக்ஸ்ம் நச்சுனு இருக்கும்.இளையராஜாவைப்பத்தி இங்கே சொல்லலேன்னா ஒரு கூட்டம் என்னை அடிக்கவே வந்துடும்.பாட்டெல்லாம் இப்போவும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல போட்ருக்கார்.அப்புறம் அந்த 'சர்தார்ஜி' காமெடி(ஹிந்தி சொல்லி கொடுக்கும் சீன்) யாராவது சிரிக்காம இருந்திருப்பாங்களா?

2.மௌனம் சம்மதம்:
நல்ல கிரைம் ஸ்டோரி.மம்மூட்டி அசத்தியிருப்பார்.'கல்யாண தேனிலா' பாட்டை மறக்க முடியுமா?எல்லா கதாபாத்திரங்களும் அழகா நடிச்சுருப்பாங்க.யார் கொலையாளின்னு கடைசி வரைக்கும் இருக்கும் suspenseதான் படத்தோட சுவாரஸ்யத்துக்கு முக்கிய காரணம்.திரைக்கதை சூப்பர்.

3.குருதிப்புனல்:
கமலோட அட்டகாசமான போலீஸ் படம்.என் favorite ஹீரோ அர்ஜுன் வேற சேர்ந்து நடிச்சுருக்கார்.இதவிட வேற காரணம் வேண்டுமா எனக்கு இந்த படம் பிடிக்க.ரெண்டு பேருமே இதுல ரொம்ப handsomeஆ இருப்பாங்க.எந்த compromiseம் பண்ணாமல் பாட்டு இல்லாம படம் எடுத்த தைரியத்துக்கே பாராட்டலாம்.

4.ஆஹா:
அருமையான குடும்ப கதை.ஒரு கூட்டுக்குடும்பத்தை நம் கண்முன்னே நிறுத்திய டைரக்டருக்கு பாராட்டுக்கள்.அதையும் சீரியஸா கொடுக்காம நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கும் விதத்துக்கே இந்த பட்டியலில் சேர்க்கலாம்னு தோணிச்சு.நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ், என் கண்ணுல தண்ணியே வந்துடும்போல இருந்தது.புதுமுகங்களை வச்சு அழகா ஒரு entertaining movie கொடுத்திருக்கார் டைரக்டர்.பானுப்ரியாவப்பத்தி சொல்லியே ஆகணும்.இந்த படம் எனக்கு பிடிக்க முக்கிய காரணம் அவங்கதான்.ஆஹா அந்த அந்தாக்ஷரில 'நின்னுகோரீ' பாட்டு பாடி 'அழகிய ரகுவரனே'ன்னு சொல்லி ஒரு வெட்கப்படுவாங்களே சூப்பர்.

5.அலைபாயுதே:
என் ஆல் டைம் பேவரிட் படம்னா அது இதுதான்.again மணிரத்தினம் சார்மிங் டைரக்டர்.romancela என்னமா பின்னி எடுக்கறார் மனுஷன்.மாதவனுக்கு ஒரு நல்ல opening.எனக்கு புடிச்ச ஹீரோயின் ஷாலினி நடிச்ச படம்.இந்த படத்துல நடிச்சதுக்கப்புரம் இவங்கள தமிழ் சினிமா மிஸ் பண்ணபோகுதுன்னு பேர் வாங்கினாங்க.அவ்ளோ சூப்பரா நடிச்சாங்க.பாட்டு....நம்ம ஆஸ்கார் ஹீரோ ஏ.ர்.ரஹ்மான்.கேட்கணுமா?5 பாட்டுமே செம ஹிட்.ஆனாலும் எனக்கு புடிச்சது 'எவனோ ஒருவன்'தான்.காதலோட,பிரிவோட வலிய அழகா காமிச்சு இருப்பாங்க.
ச்வர்ணலதாவோட குரல் பெரிய பிளஸ் பாயிண்ட்.மொத்தத்துல ரொம்ப நல்லா இருந்துச்சு.நான் theatre-ல ரெண்டு வாட்டி பார்த்தேன்.

(என் ரசிப்புத்தன்மை ஜாஸ்தியா இருக்கறதுனாலே தொடரும்....)

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails