Thursday, July 15, 2010

நான் ரசித்த திரைப்படங்கள்-II

1. காக்க காக்க:
கௌதம் மேனன்-சூர்யா-ஜோதிகா-ஹாரிஸ் ஜெயராஜ்-தாமரை சூப்பர் கூட்டணி.ஒரு நல்ல போலீஸ் படம்.சூர்யா ரொம்ப மெனக்கெட்டு ஒரு போலீஸ் எப்படி உடம்பை ஃபிட்டா வைச்சுக்கணுமோ அவ்ளோ கட்டுமஸ்த்தா வச்சுருப்பார்.சூர்யா-ஜோதிகா லவ் எபிசோடு ரொம்ப ரொமாண்டிக்கா லௌவப்லா இருந்தது.'ஒரு ஊரில்' பாடல் வரிகள் நிச்சயம் எல்லோரையும் கவர்ந்திருக்கும்.'உயிரின் உயிரே' பாடல் நிச்சயமா நிறைய பேரோட ரிங்க்டோனா இருந்திருக்கும்.கிளைமாக்ஸ் கொஞ்சம் மாத்தி இருக்கலாம்.ஒரு அழகான காதல் ஜோடிய பிரிச்சுட்டாங்களேன்னு வருத்தமா இருந்துச்சு.வன்முறையையும், கேட்ட வார்த்தைகளையும் கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம்.ஆனால் படம் சூப்பர்.

2.அன்பே சிவம்:
கமலோட தரமான படம்.மாதவனும் இணைஞ்சிருக்கார்.இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்குற வேற்றுமையை லாவகமா நகைச்சுவையா கையாண்டிருக்காங்க.கமலோட flashback தோற்றம் அழகா இருந்திச்சு.அவரோடய make-up நல்ல இருந்தது.கமல்ஹாசனுக்கு இதெல்லாம் ஒரு மேட்டேரா?கிரணுக்கும் நடிக்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.அதை ஓரளவுக்கு நல்லாவே பயன்படுத்தியிருக்காங்க.'பூ வாசம்' பாடல் அருமையான மெலடி.கிளைமாக்ஸ் மெசேஜ்தான் படத்தை தூக்கி நிறுத்துது.

3.உன்னை நினைத்து:
அழகான காதல் கதை.நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.சூர்யா ஏமாறும் இடம் இப்படியெல்லாம்கூட எமாத்துராங்களான்னு நினைக்க தோணுது.ஆனா நிஜத்தில் இதைவிட மோசமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.சிநேகாவின் கதாபாத்திரம் நன்று.லைலா, ஒரு சராசரி பெண்ணை பிரதிபலிக்கிறார்.சினிமா கதாநாயகியானால் காதலுக்காக தூக்கி எரியும் விதியை மீறி நடித்திருக்கிறார்.'என்னை தாலாட்டும்' பாடல் வரிகள் நன்று.இதுவும் மெசேஜ் சொல்லும் படமே!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails