Thursday, July 29, 2010

நான் சமீபத்தில் ரசித்த திரைப்படங்கள்!

நான் ரொம்ப நாளைக்கப்புறம் படங்கள் பாத்தேன்.பாத்தா மட்டும் போடுமா?அதான் உங்களோட என் கருத்துக்கள(நல்லா கவனிங்க மக்களே என் கருத்துக்கள மட்டும்) பகிர்ந்துக்கலாம்னு வந்துட்டேன்.

1.மதராசபட்டினம்:
ags entertainment produce பண்ணி இருக்காங்க.ஆர்யா,எமி ஜாக்சன்,நாசர்,பாலா சிங்,மற்றும் பலர் நடிச்சுருக்காங்க.விஜய்(கிரீடம் புகழ்(???!!!)) டைரக்ட் பண்ணி இருக்காரு.G.V.பிரகாஷ் இசை.ஆஹா பழைய சென்னைய அழகா காமிச்சுருக்காக.எமி சூப்பரா நடிச்சுருக்காங்க.(தமிழ் heroines கவனத்திற்கு)ஆர்யா நல்லா குஸ்தி போடுறார்,ஆடி பாடுறார் ஆனா மனுஷனுக்கு feelingsஅ கண்ணுல காமிச்சு நடிக்க மாட்டேன்குறாரே!ஆர்யா படத்தோட ஒட்டாதமாதிரியே ஒரு feeling.அவங்க காதலும் அவ்ளோ ஆழமா இல்ல (or தெரியல)."ஆருயிரே" அர்த்தமுள்ள பாட்டு situation சரி இல்லைங்கே.அவங்க பிரிஞ்சதுக்குஅப்புறம் வச்சிருக்கலாம்.(ரயில்வே ஸ்டேஷன்ல பாக்குரத்துக்கு முன்னாடி வச்சிருக்கலாம்).anyway nice movie to be watched.

2.ஆனந்தபுரத்துவீடு:
நந்தா,சாயாசிங்,கிருஷ்ணா நடிச்சிருக்காங்க.நல்ல கதை.இந்த படத்த பாத்தப்புறம் அவங்கவங்க அப்பா அம்மா மேல இருக்குற பாசம் ஜாஸ்தி ஆகும்.நண்பனோட துரோகம், அத அழகா "நான் தனிய இருந்தப்போ ஒரே நண்பனா வந்தான் அவன விட்ருங்க"னு சொல்றது,மனைவியிடம் தன் கஷ்டத்தை மறைப்பதுனு direction சூப்பர்.நம்ம நாகாவாச்சே.(சின்னத்திரை மர்ம தேசம் புகழ்).ஆனாலும் திரைக்கதை கொஞ்சம் சுவாரஸ்யமா இருந்திருக்கலாம்னு தோணுது.படம்...ஒருமுறை குடும்பத்தோடு பார்க்கலாம் .

3.இரும்புகோட்டைமுரட்டுசிங்கம்:
லாரான்ஸ்,சந்த்யா,லக்ஷ்மி ராய்,பத்மப்ரிய,மௌலி,செந்தில், மனோரமா,...இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு இந்த படத்துல.
கதைன்னு பாத்தா ஒன்னும் இல்லேங்கே.ஆனா சூப்பர் காமெடி.அதுவும் அந்த புதையல் எடுக்குற சீன்தான் படத்துக்கு highlight.ரொம்ப நல்லா இருக்குனு சொல்ல முடியாட்டியும் ஒருமுறை பாக்கலாம்.

4.ரெட்டைசுழி:
பாரதிராஜா,பாலச்சந்தர் என இரு பெரும் இயக்குநர்கள நடிகர்களாக்கி இருக்காங்க.இயக்குனர்களுக்கு நடிக்க கத்துகொடுக்கணுமா?நல்லாவே செஞ்சிருக்காங்க.பல இடங்கள்ள "பசங்க" படத்த ஞாபகப்படுத்தரத தடுக்க முடியல.ஆனாலும் விறுவிறுப்பா போகுது.பாலச்சந்தர் வில்லன் நடிப்புல கச்சிதம்.பாரதிராஜா அடக்கி வாசிச்சு பெற தட்டிட்டு போய்ட்றாரு.அஞ்சலி நல்ல நடிச்சுருக்காங்க.படம் நல்லாவே இருந்துச்சு.

5.பையா:
லிங்குசாமி படம்.கார்த்தி,தமன்னா நடிச்சுருக்காங்க.கார்லயே படம் போகுது.பாட்டெல்லாம் சூப்....பர்!"என் காதல் சொல்ல" என்னா வரிகள்?அட்ரா அட்ரா....சூப்பர்ங்கோ.ஆனா கிளைமாக்ஸ்ல தமன்னாவுக்கு கார்த்தி மேல காதல் வந்தே ஆகணும்னு திணிச்சாமாதிரி இருக்கு.வேற வழியே இல்லாம கார்த்திய லவ் பண்றாமாதிரி காமிச்சது நல்லா இல்லைங்கோ!படம் ஓகே...சூப்பர்னெல்லாம் சொல்ல முடியாது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails