தலைப்பை பார்த்துட்டு யாரும் தப்பா நினைக்க வேணாம்.நான் 8th std படிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைபத்தி இங்கே எழுதபோறேன்.
எங்க ஸ்கூல் எங்க வீட்லருந்து ஒரு 10 நிமிஷம்தான்.அதனால நான் வீட்டுக்கு என் friendsஓடதான் daily போவேன்,வருவேன்.எங்க ஸ்கூல் இருக்கறது ஒன்னும் பெரிய ரோடெல்லாம் இல்லை.ஆனாலும் பெரிய வண்டிங்க போகும்.ஆனா இந்த பீக் ஹவர்ஸ்ல அந்த பக்கம் போறது ரொம்பவே கஷ்டம்.
நானும் என் பிரெண்ட்சும் ஒரு நாள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தோம்.நாங்க ஓரமாதான் நடந்து போனோம்.அப்போ எங்க பின்னாலே வந்த பைக்ல ரெண்டு வாலிபர்கள் இருந்தாங்க.அப்போதான் விஜயோட "பத்ரி" படம் ரிலீஸ் ஆகி "ஏ..பாப்பா" அப்படின்ற பாட்டு ரொம்ப famous ஆச்சு.அதுல ஒருத்தன் எங்க ஃப்ரெண்ட பாத்து "ஏ..பாப்பா நீ கொஞ்சம் தள்ளு"னு பாடினான்.அப்போ கோவம் வந்தாலும் அப்புறம் நினைச்சு பாக்கும்போது அவனோட timing sense நல்லா இருந்ததுன்னு தோணிச்சு.பிறகு அவள எங்க ரோட்ல பார்த்தாலும் இதே பாட்ட பாடி கிண்டல் பண்றதே ஒரு வேலையா வச்சிருந்தோம்....
Thursday, July 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment