Friday, July 30, 2010

அம்மா!!!

அம்மா...ரொம்ப அழகான வார்த்தைங்க.ஒவ்வொரு மனுஷனும் பிறந்தவுடன் சொல்ற முதல் வார்த்தை 'அம்மா'தாங்க.(என்ன நீ புதுசா சொல்ல போறன்னுதானே கேட்குறீங்க?கரெக்ட் நான் ஒன்னும் புதுசா சொல்ல போறதில்லை.)

கடவுள் பூமிக்கு வந்து ஒவ்வொருத்தரையும் பாத்துக்கமுடியாதுங்கரதால அவரோட பிரதிநிதிகளா அம்மான்ற உறவை நமக்கு கொடுத்திருக்கார்.நாத்திகவாதிகூட அம்மான்ற தெய்வத்துமேல அன்பும்,பக்தியும் கொண்டிருக்கறத நாம பாக்கலாம்.அப்படி என்ன 'அம்மா' முக்கியம்.நம்ம ஊர்ல அம்மா மேல இருக்குற ஒரு செண்டிமெண்ட் அப்பா மேல கிடையாது(அவர் எவ்ளோவோ செஞ்சாலும்).அதுக்கு காரணம் பத்து மாசம் அவங்க சுமந்து பெறுவதால் மட்டும் இல்லன்னு நான் நினைக்கிறேன்.ஒரு குழந்தை பிறந்தப்புறமும் அது நைட்ல தூங்காம அழும்போது முழிச்சிருந்து பாத்துகிட்டு
காலையிலயும் கணவனுக்கு உணவு கொடுத்து அவர ஆபீஸ் அனுப்பிவைப்பாங்க.பிள்ளைக்கு ஒத்துக்காதுன்னு அவங்களுக்கு பிடிச்ச உணவா இருந்தாலும் எடுத்துக்க மாட்டாங்க.அவங்களோட விஉப்பத்தைஎல்லாம் மறைச்சு பிள்ளைகளோட விருப்பத்தையே முன்னிருத்துவாங்க.அவங்களோட கண்டிப்புலையும் ஒரு பாசம் ஒளிஞ்சிருக்கறது நல்லா தெரியும்.இன்னும் எத்தனையோ....நான் சொல்லாம விட்டது.

நிஜம்மாவே 'அம்மா'ங்கறவங்க தெய்வம்தாங்க.இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னு நினைக்கறீங்களா?என்னோட முதல் பதிவு அம்மாவபத்தி இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.But வேற எதோ போட்டுட்டேன்.அதான் சரி இப்போ போடலாமேன்னு....

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails