இன்றைய சூழலில் நாம் வசதியாக,பகட்டாக வாழலாம்.சந்தோஷமாக,நிம்மதியாக வாழ்கிறோமா?மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலளித்தால் இல்லை எனலாம்.
நாம் அன்று விளையாடிய விளையாட்டுக்கள் இன்று எத்தனை குழந்தைகளிடம் பரிச்சயமாயிருக்கும்?பல்லாங்குழி,நொண்டி(அல்லது பாண்டி),கல்லா மண்ணா, இன்னும் பல.
T.v., வீடியோ கேம்ஸ்-ல் ஆர்வம் காட்டும் குழந்தைகள் இன்று ஓடி விளையாடுவதில்லை.விளையாடுவதற்கு ஏற்ற சூழலும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.அக்கம் பக்கத்தில் பேசுவதே கிடையாது.(காரணம்:நேரம் இல்லை).வீட்டிலும் தனிமை(பெற்றோரும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்,தாத்தா பாட்டியும் வீட்டில் கிடையாது).Battery உபயோகித்து விளையாடும் விளையாட்டு சாமான்கள் ஜாஸ்தியாகிவிட்டன.அதற்க்கும் அடிக்கடி Battery மாற்றவேண்டும்,அடிக்கடி விளையாடாதே என்று திட்டு வேறு.Battery பொம்மைகள் அல்லாது குழுவாக சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் மலையேறிவிட்டன.இப்படியே போனால் நம் குழந்தைகளுக்கு மற்ற வகுப்புகளை போல பிறரோடு எப்படி பேசவேண்டுமென்றும்,பழகவேண்டுமென்றும் வகுப்பெடுக்க நேரிடும்.அதற்கு முன்னரே விழித்துகொள்வோம்.குழந்தைகளுக்கு பல ஆற்றல்கள் வரவைப்பதில் தவறில்லை ஆனால் அவை அவர்களின் உலகத்தையே திருடி அவர்களை அவர்களாக இல்லாமல் செய்வதை தடுக்க வேண்டும்.குழந்தைகள் தெய்வங்களின் மறு உருவம்.ஆகவே அவர்களின் குழந்தைபருவம் இனிதாய் அமைய ஓடி ஆடி விளையாட ஆயத்தபடுத்துவோம்!
Monday, August 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பதிவு தென்றல்.
என் பையனை தினமும் அரை மணிநேரமாவது கீழே அழைத்துக்கொண்டு சென்று மற்ற பிள்ளைகளோடு விளையாட விடுகிறேன். அவனும் எஞ்சாய் செய்கிறான்.
Nanru vidhya!Pinnoottathirku nanri!Idhe ponru matravargalum seidhaal nam varungaala India arivullathaga mattumallaamal aarogyamaagavum irukkum!!
Post a Comment