Wednesday, September 1, 2010

ஸ்ரீ பாதம்!!!


கிருஷ்ண ஜெயந்தின்னு சொன்னாலே நம்ம ஞாபகத்துக்கு வர்றது பூஜை செய்றது,பட்சணம் பண்ணறது,முக்கியமா பாதம் போடுறதுதான்.இந்த பாதம் பிறந்த குட்டி கிருஷ்ணர்துன்னு பலர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க.(ஏன் முதல்ல நானும் அப்படிதான் நினைச்சேன்). சிலர் தங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளோட பாதங்கள மாவுல நனைச்சு பாதம் போடுறதை பாத்திருக்கேன்.ஆனால் அது அப்படி இல்லை.

திருமால் இருக்கும் எல்லா இடத்திலையும் மகாலட்சுமியும் குடிஇருப்பா.அந்த பாதமும் கிருஷ்ணரோட பாதம் இல்ல, அதற்கு பேர் "ஸ்ரீ பாதம்".மகாலக்ஷ்மியோட கால் தடம்.ஐஸ்வர்யத்தோட முகவரி.
இந்த தகவலோட இந்த வருஷ "கிருஷ்ண ஜெயந்திய" கொண்டாடுங்க.

டிஸ்கி:இந்த தகவல் "ரேவதி சங்கரன்" அவர்கள் "சூப்பர் மாம்" நிகழ்ச்சிக்காக விஜய் டிவில சொன்னது இது.தெரியாதவங்களுக்கு பயனுள்ளதா இருக்குமேன்னுதான் இந்த பதிவு.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails