நான் ஒரு பாட்ட கேட்கறதுக்கு மியூசிக்,பிடிச்ச ஹீரோ நடிச்ச பாடல் இப்படி பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் அந்த பாடலோட வரிகள்.
அப்படி நான் ரசிச்ச சில பாடல் வரிகள்தான் இங்கே கொடுத்திருக்கேன்.
அட்டகாசம் படத்துல "தீபாவளி"ங்குற பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்,
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்துவந்தா ஒரே தோளில் ஏற்றி வைக்கும்"
எப்போவும் தன்னம்பிக்கையும்,சாதிக்கணும்கிற எண்ணத்தையும் விதைக்கிற வரிகள்.
ரெட் படத்துல "கண்ணை கசக்கும்" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே;உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே".இந்த உலகம் இப்போ இருக்குற நிலைமைல நம்மள விழிப்பா இருக்கணும்னு சொல்ற வரிகள்.
காதல் வைரஸ் படத்துல "எந்தன் வாழ்வின்" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"காதல் ஒன்றும் காயமல்ல காலபோக்கில் ஆறிபோக","என்னைவிட்டு போனது அமைதியன்றோ;நீயுமில்லா நானுமோர் அகதியன்றோ".ஆஹா காதலோட வழிய சொல்ற அருமையான வரிகள்.
சிகரம் படத்துல "அகரம் இப்ப" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்கை உள்ளது".இந்த பாடல் முழுக்க தன்னம்பிக்கை சிந்தனைகள் இருந்தாலும் இந்த ரெண்டு வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Friday, September 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அட்டகாசம் படத்துல அந்தப் பாட்டுல அஜீத்தோட டான்ஸ். அய்யய்யோ
Nice selection of songs
சிகரம் பட பாடல் வரிகள் அருமையா இருக்கும்
Post a Comment